ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

சன்னி வேயோன், ஹனி ரோஸ், ராஜேஸ்வரி பொன்னப்பா நடித்துள்ள மலையாள படம் அக்குவாரியம். இந்த படம் கேரளாவில் வாழும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையை பற்றியதாகும். இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று கேரள கன்னியாஸ்திரிகள் சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது கொரோனா காலம் என்பதாலும், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் தேவை இல்லை என்பதாலும் படத்தை நாளை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு தடைகேட்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஜெஸ்ஸி மணி என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்த படம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை அவதூறாக சித்தரிக்கிறது. அவர்களின் பாலியல் பிரச்சினைகள் பற்றி தவறாக பேசுகிறது. 2013ம் ஆண்டு பிதாவினம் புத்ரானம் பரிசுத்தாதம்வினம் (பிதா சுதன் பரிசுத்த ஆவி) என்ற பெயரில் தயாராகி தணிக்கை சான்று மறுக்கப்பட்ட படம். தற்போது அக்குவாரியம் என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தற்காலிக தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.