‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
சன்னி வேயோன், ஹனி ரோஸ், ராஜேஸ்வரி பொன்னப்பா நடித்துள்ள மலையாள படம் அக்குவாரியம். இந்த படம் கேரளாவில் வாழும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளின் வாழ்க்கையை பற்றியதாகும். இந்த படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என்று கேரள கன்னியாஸ்திரிகள் சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளது.
தற்போது கொரோனா காலம் என்பதாலும், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் தேவை இல்லை என்பதாலும் படத்தை நாளை ஓடிடி தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டுக்கு தடைகேட்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஜெஸ்ஸி மணி என்பவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "இந்த படம் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகளை அவதூறாக சித்தரிக்கிறது. அவர்களின் பாலியல் பிரச்சினைகள் பற்றி தவறாக பேசுகிறது. 2013ம் ஆண்டு பிதாவினம் புத்ரானம் பரிசுத்தாதம்வினம் (பிதா சுதன் பரிசுத்த ஆவி) என்ற பெயரில் தயாராகி தணிக்கை சான்று மறுக்கப்பட்ட படம். தற்போது அக்குவாரியம் என்ற பெயரில் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தற்காலிக தடை விதித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.