இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் வசூல் நடிகர்களில் முதன்மையானவர் என்ற பெயரை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று தான் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். சிறிது ஓய்விற்குப் பிறகு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் இறங்காத காரணத்தால் இன்னும் சில படங்களில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று ஏற்கெனவே சொல்லப்பட்டது. அண்ணாத்த படத்திற்குப் பிறகு அவர் யாருடைய தயாரிப்பில், யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சு இப்போதே எழுந்துவிட்டது.
அமெரிக்கா செல்வதற்கு முன்பாகவே அடுத்த படம் என்ன என்பதை ரஜினிகாந்த் முடிவு செய்வார் என்றும் தெரிகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பியதுமே புதிய படத்தில் நடிக்க ஆரம்பிப்பார் என்றும் சொல்கிறார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க அவருடைய மருமகன் தனுஷ், கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் தயாராக இருப்பதாகக் கேள்வி. அதே போல ரஜினிகாந்த்தை சந்தித்து சில இயக்குனர்கள் ஏற்கெனவே கதை சொல்லியிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
ரஜினிகாந்தின் சம்பளம் 100 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். அவரை வைத்து படம் தயாரித்தால் குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய் பட்ஜெட் வேண்டும். அதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களது படத்தில் மட்டும்தான் ரஜினிகாந்த் நடிக்க முடியும்.
தன்னை வைத்து ஏற்கெனவே படங்களைத் தயாரித்தவர்களுக்கு முன்னுரிமை தருவாரா, இதுவரை தன்னை இயக்காத இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவாரா என்று கோலிவுட்டில் காத்திருக்கிறார்கள்.