கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ் - கிர்த்தி சனோன் நடித்து வரும் படம் ஆதி புருஷ். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றுள்ளது. அதையடுத்து ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பை நடத்த ஹைடெக்கான செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செட்டில் விரைவில் படப்பிடிப்பை தொடரவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தெலுங்கு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வரும் நேரத்தில் பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் செய்திகள் வெளியானதை அடுத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை அடுத்து படப்பிடிப்பை தொடர்வதா? இல்லை நிறுத்தி வைப்பதா? என்பது குறித்து ஆதி புருஷ் படக்குழு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.