கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த வருடம் ஏற்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள பல்வேறு பகுதி மக்களுக்கும் தற்போது வரை தொடர்ந்து உதவி செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். அவரைப் போல களத்தில் இறங்கி வேறு எந்த ஒரு முன்னணி நடிகரும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோனு சூட்டிடம் உதவி கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருகிறதாம். அது குறித்து டுவிட்டர் தளத்தில், “நேற்று மட்டும் 41,660 வேண்டுகோள்கள் வந்தது. ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்ள வேண்டும் என நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால், அது முடியாத ஒன்று. ஒவ்வொருவரையும் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அதற்கு குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் ஆகும், அதாவது 2035ல் தான் தொடர்பு கொள்ள முடியும்,” எனத் தெரிவித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பல பிரபலங்களுக்கும் கூட தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் சோனு சூட். அவர் களத்தில் இறங்கி உதவி செய்வதைப் பார்த்தும் கூட அவரை விட பல கோடி ரூபாய் அதிக சம்பளம் வாங்கும் சில நடிகர்கள் எந்த உதவியையும் செய்ய முன்வராமல் இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.