அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 65வது படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நமது சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு ஜார்ஜியா நாட்டில் ஆரம்பமானது.
விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு 25 நாட்கள் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டதற்கு முன்பாகவே குழுவினர் சென்னை திரும்பினர். வந்தபின் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குடும்பத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார் விஜய்.
இந்த வாரத்தில் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். அதற்காக பிரம்மாண்ட ஷாப்பில் மால் அரங்கமும் தயாராகி வந்ததாம். ஆனால், கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக, படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என விஜய் தெரிவித்தாராம். மேலும், அரங்கம் அமைக்கும் பணியாளர்களின் நலனைக் கருதியும் அந்த வேலையையும் நிறுத்தச் சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கொரோனா தாக்கம் குறைந்து எப்போது படப்பிடிப்பு ஆரம்பிக்க முடிவெடுக்கிறோமோ அதற்கு முன்பு மீண்டும் அந்தப் பணிகளைத் துவக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.