என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டதில் சிலர் வெற்றி பெற்றார்கள், சிலர் தோல்வியுற்றார்கள். நடிகரான உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளரான அம்பேத்குமார் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். அவர்களோடு தியேட்டர் ஓனர் ஒருவரும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் சென்னை, ராயபுரம் பகுதியில் உள்ள ஐடிரீம் என்ற தியேட்டர் ஓனர் மூர்த்தி.
அவர் தோற்கடித்தது ஒரு அமைச்சரை என்பதுதான் ஆச்சரியத் தகவல். அதிமுக அரசில் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை எதிர்த்து முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டார் மூர்த்தி. ஜெயக்குமாருக்கு தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு பல வருடங்களாக இருக்கிறது. அதையும் மீறி மூர்த்தி வெற்றி பெற்றதை அரசியல் பார்வையாளர்கள் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த தியேட்டர் ஓனராக பாஜக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டர் ஓனர் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வத்தின் மகன்.
இவர் திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபுவை எதிர்த்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் சில சுற்றுகளில் முன்னணியில் இருந்த வினோஜ் பின்னர் பின்தங்கினார்.
திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் ஒருவர் தற்போது சட்டமன்றத்தில் இடம் பெற உள்ளார். அவர் மூலம் தங்கள் பிரச்சினைகள் சட்டமன்றத்தில் ஒலிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.