கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி | மீண்டும் இணையும் இருமுகன் கூட்டணி | மீசைய முறுக்கு 2 டீசருக்கு வரவேற்பு | அதிகரிக்கும் ரீ ரிலீஸ் படங்கள் : நல்லதா.... கட்டுப்பாடு வரணுமா...? | வரலட்சுமி இயக்கும் தெலுங்குப் படம் : 'சரஸ்வதி' டிரைலர் ரிலீஸ் | பெங்களூரு ஏஎம்பி சினிமாஸ் தியேட்டரில் மகேஷ்பாபு | சென்னையும், தமிழும்…. பிரபாஸ் நெகிழ்ச்சி… | 'டாக்சிக்' டீசர் : கன்னடத்தை விட தெலுங்கு, ஹிந்தி 'டாப் வியூஸ்' | 4 இடியட்ஸ் : ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை | யார் ஹீரோ... திணறும் நெல்சன்... 47 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி, கமல் பட அறிவிப்பு வீடியோ வெளியீடு |

நடிப்பதற்கு கையில் படம் இல்லை என்றாலும் மீடியாக்களின் கவனத்தை திருப்ப அடிக்கடி எதையாவது செய்கிறவர் நடிகர் மன்சூரலிகான். சில நேரங்களில் அது அவருக்கு ஆபத்தாக முடியும்.
அப்படித்தான் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவமனை வாசலில் நின்று கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசியையும் விவேக்கின் உடல் நலனையும் ஒப்பிட்டும், கொரோனா இந்தியாவிலேயே இல்லை, அரசு ஏமாற்றுகிறது என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம்,பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மன்சூரலிகான் கைது செய்யப்படுவார் என்றும், ஜாமீனில் வெளிவர முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில் முன்ஜாமீன் கேட்டு மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.




