இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கொரோனா பரவலின் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் கடந்த 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இன்று ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகளையும், ஞாயிற்றுக் கிழமை காட்சிகளையும் நடத்த முடியாது.
இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், புதிய ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் பாதிக்கப்படும். எனவே, தியேட்டர்களை மூட முடிவு செய்துள்ளோம் என்றும், அது குறித்து விவகாதிக்க உள்ளோம்,” என்றும் தெரிவித்தார்.
அதன்படி இன்று ஜும் மீட்டிங்கை தியேட்டர்காரர்கள் நடத்தி உள்ளார்கள். கூட்டத்தின் முடிவில் தியேட்டர்களை அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளார்களாம். இரு தினங்களுக்கு முன்பு தியேட்டர்களை மூடுவோம் என்றவர்கள் இன்று அவர்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
இருந்தாலும் நேற்று முதலே தியேட்டர்களுக்கு மக்கள் வருகை மிகவும் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு என்பதால் மக்கள் தியேட்டர்களுக்கு பகல் நேரங்களில் வருவதைக் கூட நாளை முதல் தவிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய புதிய படங்கள் ஏற்கெனவே அவர்களது வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ள நிலையில், இந்த வாரம் சிறிய படங்கள் வெளிவந்தால் அவற்றைப் பார்க்க மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகம் தான்.
மீண்டும் கடந்த வருட நவம்பர் மாத சூழ்நிலையே தற்போது திரும்பி வரும் என தியேட்டர்காரர்கள் மத்தியில் ஒரு அச்சம் எழுந்துள்ளதும் உண்மை.