அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பீட்சா, சூது கவ்வும், தெகிடி, அட்டகத்தி, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். தற்போது 4ஜி, டைட்டானிக், காதலும் கவுந்து போகும் ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். மாயவன் மற்றும் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். மாயவன் 2ம் பாகத்தை இயக்கவும் உள்ளார்.
இதற்கிடையில் சி.வி.குமார் கொற்றவை என்ற பேண்டசி படம் ஒன்றையும் இயக்கி வருகிறார். 3 பாகமாக தயாராகும் இந்த படத்தின் முதல் பாக படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதில் ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், சுபிக்ஷா உள்பட பலர் நடிக்கிறார்கள். எழுத்தாளர் தமிழ்மகன் வசனம் எழுதுகிறார்.
படம் பற்றி சி.வி.குமார் கூறியதாவது: வரலாற்றில் நடந்த ஒரு முக்கியமான நிகழ்வை மையப்படுத்தி இந்த படம் தயாராகிறது. வரலாற்று காலம், நிகழ்காலம் என மாறி மாறி கதை பயணிக்கும். புதையல் வேட்டை தொடர்பான பேண்டசி கதை. அனைத்து விதமான சுவாரஸ்யங்களும் நிறைந்த படமாக இருக்கும். 3 பாகங்களாக படம் வெளிவருகிறது. முதல் பாகத்துக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்திருக்கிறது. அடுத்தடுத்த பாகங்கள் உரிய இடைவெளியில் வெளியாகும். முதல் இரண்டு பாகத்தின் கதைக்கான கிளைமாக்சாக 3வது பாகம் இருக்கும். என்றார்.