அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், தனது தந்தை மம்முட்டியை போலவே தமிழிலும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான். அதற்கேற்றபடி கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது தமிழில் 'ஹே சினாமிகா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்,. இந்தப்படத்தை பிரபல நடன இயக்குனர் பிருந்தா இயக்குகிறார். காஜல் அகர்வால், அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் துல்கர் சல்மான். மலையாளத்தில் ஏற்கனவே பல படங்களில் அவர் பாடியிருந்தாலும், தமிழில் இதுதான் அவர் பாடும் முதல் பாடல். மதன் கார்க்கி இந்த பாடலை எழுத, '96' புகழ் கோவிந்த் வசந்தா இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
தமிழில் பாடியது குறித்து துல்கர் சல்மான் கூறும்போது, “இதுபோன்ற பாடல் கிடைத்தற்கு நான் உண்மையிலேயே புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.