ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் அதுதான் அனுமதியாக இருந்தது. பின்னர்தான் முழுமையாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.
ஆனால், 100 சதவீத அனுமதி வருவதற்கு முன்பே தமிழில் வெளிவந்த 'மாஸ்டர்' படம் பெரிய வசூலைக் குவித்தது. முதல் நாள் வசூலாக 35 கோடி வசூலித்தது.
தென்னிந்திய அளவில் அதுதான் கொரோனா தளர்வுகளுக்குப் பின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை பவன் கல்யாண் நடித்து நேற்று தெலுங்கில் வெளிவந்த 'வக்கீல் சாப்' படம் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
'வக்கீல் சாப்' படத்தின் முதல் நாள் 40 கோடியைக் கடந்துள்ளதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிலர் 50 கோடி என்றும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், 'வக்கீல் சாப்' படத்தின் வசூலை 'மாஸ்டர்' பட வசூலுடன் ஒப்பிடக்கூடாது என்பதுதான் உண்மை. 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதியில் மட்டுமே வெளியான படம். 'வக்கீல் சாப்' படம் 100 சதவீத இருக்கைகளில் வெளிவந்த படம்.
'வக்கீல் சாப்' படம் 100 கோடி வசூலை எளிதில் கடந்துவிடும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அதற்கு மேலும் வசூலிக்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும்.