ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது |
கொரோனாவின் அடுத்த அலை மிகவும் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். ஏற்கனவே ஆமீர்கான், ஆலியாபட், அக்ஷய் குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புதிதாக ஹிந்தி நடிகர்கள் கோவிந்தா, விக்கி கவுசல், பூமி பெட்னெகர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, நடிகர் அக்ஷய்குமார் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து இருந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமா பிரபலங்களை அடுத்தடுத்து கொரோனா தாக்கி வருவதால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அனைரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பலரும் கேட்டு வருகிறார்கள்.