மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
கொரோனாவின் அடுத்த அலை மிகவும் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். ஏற்கனவே ஆமீர்கான், ஆலியாபட், அக்ஷய் குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புதிதாக ஹிந்தி நடிகர்கள் கோவிந்தா, விக்கி கவுசல், பூமி பெட்னெகர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, நடிகர் அக்ஷய்குமார் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து இருந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமா பிரபலங்களை அடுத்தடுத்து கொரோனா தாக்கி வருவதால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அனைரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பலரும் கேட்டு வருகிறார்கள்.