மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஒரு பாடலோ, படமோ வெளிவரும் முன் வெற்றி பெற வைக்க சொல்லி பத்திரிகையாளர்களிடம் எடுத்து வருவதும், அது பெரும் வெற்றி அடைந்து விட்டால் பத்திரிகையாளர்களை கண்டு கொள்ளாததும் சமீபகாலமாக சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லேப்பில் மாஜா தளம் மூலம் வெளியிடப்பட்ட பாடல் ‛என்ஜாய் என்சாமி. பாடகி தீ மற்றும் அறிவு பாடிய இந்தப்பாடல் தான் இப்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்த பாடலை ரசித்து வருகின்றனர். யு-டியூப்பில் மட்டும் இந்த பாடலுக்கு 98 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. திரை பிரபலங்கள் பலரும் பாடலை பாராட்டி டுவீட் செய்ததோடு, அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.
இதனிடையே இப்பாடலுக்கான வரவேற்பு பற்றி தெரிந்து கொள்ளலாம் என சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் பேட்டி எடுக்கலாம் என பத்திரிக்கையாளர்கள் முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ரஹ்மானின் மேனேஜர் நோயல் என்பவர் கனடாவில் உள்ளார். அவர் மூலம் தான் எல்லாவற்றையும் தொடர்பு கொள்ள முடியுமாம். அவரிடம் பேசினால் முதலில் வாட்ஸ்-அப் அல்லது மெயில் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அவருக்கு அந்த பதில் திருப்தி அளித்தால் மட்டுமே கலைஞர்களை பேட்டி எடுக்க ஏற்பாடு செய்வாராம்.
சரி அவர் தான் அப்படி இந்த பாடலை பாடி தீயை தொடர்பு கொள்ளலாம் என அவரின் தாயாரை தொடர்பு கொண்டால் அவரும் சரியான பதில் தருவது கிடையாது. அறிவை கேட்டால் எதுனாலும் நோயலிடம் கேளுங்கள் என்று கூறுகிறார். பல மீடியாக்களில் இருந்தும் பல நாட்களாக இந்த பாடல் குழுவிழனரை தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லாததால் பத்திரிகையாளர்கள் கோபத்தில் உள்ளனர்.
ஏற்றி விடும் ஏணியை எட்டி உதைக்க நினைப்பது ஏனோ.?