பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பு இரவு நேரப் படப்பிடிப்பாக பெரிய அரசியல் மாநாடு காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் மண் தரையில் சிலம்பரசன் படுத்து உறங்கும் புகைப்படங்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே வெளியிட்டுள்ளார்.
“நடிகர்களின் வாழ்க்கை, எளிமையின் மனிதன், இரவு நேரப் படப்பிடிப்பில், மாநாடு படப்பிடிப்புக்கு இடையில்” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
சிம்புவின் எளிமையைக் கண்டு ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.




