நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பு இரவு நேரப் படப்பிடிப்பாக பெரிய அரசியல் மாநாடு காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் மண் தரையில் சிலம்பரசன் படுத்து உறங்கும் புகைப்படங்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே வெளியிட்டுள்ளார்.
“நடிகர்களின் வாழ்க்கை, எளிமையின் மனிதன், இரவு நேரப் படப்பிடிப்பில், மாநாடு படப்பிடிப்புக்கு இடையில்” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
சிம்புவின் எளிமையைக் கண்டு ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.