அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பு இரவு நேரப் படப்பிடிப்பாக பெரிய அரசியல் மாநாடு காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் மண் தரையில் சிலம்பரசன் படுத்து உறங்கும் புகைப்படங்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே வெளியிட்டுள்ளார்.
“நடிகர்களின் வாழ்க்கை, எளிமையின் மனிதன், இரவு நேரப் படப்பிடிப்பில், மாநாடு படப்பிடிப்புக்கு இடையில்” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
சிம்புவின் எளிமையைக் கண்டு ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.