தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
‛பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தவர், இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கில் அவர் நடித்துள்ள நாரப்பா(அசுரன் ரீ-மேக்), விராட பர்வம் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதுதவிர சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பிலிம்பேர் நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் கிளாமராக உடையணிந்து பங்கேற்றார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் பிரியாமணி. இதற்கு ஏராளமான லைக்ஸ்களும், கருத்துகளும் குவிந்தன.
ரசிகர் ஒருவர் பிரியாமணியின் இந்த கிளாமர் போட்டோவை பார்த்து, ‛என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என கேட்டார். அதற்கு, ‛‛எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள். அவர் சம்மதித்தால் நான் உங்களை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறேன்'' என கூலாக பதிலளித்தார் பிரியாமணி. இவரின் இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலானது.