ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
‛பருத்திவீரன்' படத்திற்காக தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. அதன்பின் பல படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தவர், இப்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். தெலுங்கில் அவர் நடித்துள்ள நாரப்பா(அசுரன் ரீ-மேக்), விராட பர்வம் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இதுதவிர சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பிலிம்பேர் நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் கிளாமராக உடையணிந்து பங்கேற்றார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் பிரியாமணி. இதற்கு ஏராளமான லைக்ஸ்களும், கருத்துகளும் குவிந்தன.
ரசிகர் ஒருவர் பிரியாமணியின் இந்த கிளாமர் போட்டோவை பார்த்து, ‛என்னை திருமணம் செய்து கொள்வீர்களா?' என கேட்டார். அதற்கு, ‛‛எனக்கு ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால் என் கணவரிடம் அனுமதி கேளுங்கள். அவர் சம்மதித்தால் நான் உங்களை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொள்கிறேன்'' என கூலாக பதிலளித்தார் பிரியாமணி. இவரின் இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலானது.