என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்களும் உண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர்களும் உண்டு. ஆனால் கடந்த சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகர் ஆரி அளவிற்கு இதற்கு முன்னர் தமிழ் பிக் பாஸில் யாரும் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெறவில்லை.
டைட்டிலை வென்ற கையோடு தனது பட வேலைகளிலும், சமூகசேவையிலும் பிஸியாகி விட்டார் ஆரி. அலேகா', 'பகவான்' மற்றும் 'எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்' என ஆரி நாயகனாக நடித்து வரும் மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவை தவிர சமீபத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆரி. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தில் ஆரி போலீசாக நடிக்கிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி வெளியிட்டுள்ள பதிவில், 'விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக' தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த அறிவிப்பு ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆரியின் அந்த மாஸ் அறிவிப்பிற்காக அவரது ஆர்மியினர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.