முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி |
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்களும் உண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர்களும் உண்டு. ஆனால் கடந்த சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்ற நடிகர் ஆரி அளவிற்கு இதற்கு முன்னர் தமிழ் பிக் பாஸில் யாரும் மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெறவில்லை.
டைட்டிலை வென்ற கையோடு தனது பட வேலைகளிலும், சமூகசேவையிலும் பிஸியாகி விட்டார் ஆரி. அலேகா', 'பகவான்' மற்றும் 'எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்' என ஆரி நாயகனாக நடித்து வரும் மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவை தவிர சமீபத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆரி. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தில் ஆரி போலீசாக நடிக்கிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி வெளியிட்டுள்ள பதிவில், 'விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக' தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த அறிவிப்பு ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆரியின் அந்த மாஸ் அறிவிப்பிற்காக அவரது ஆர்மியினர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.