இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் , சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது. இதில் நடித்த தனுஷ், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இதற்காக வெற்றி மாறனுக்கு ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து தாணு வாழ்த்து தெரிவித்தார்.
தேசிய விருது கிடைத்தது பற்றி வெற்றிமாறன் கூறியிருப்பதாவது: தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கும். எப்போதுமே படம் இயக்கும்போது விருதுகளுக்காக இயக்குவதில்லை. அந்தப் படத்தின் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வழங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். இந்த விருதையும் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
அசுரன் சமூக நீதிக்கான கதை, அது மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்பது தான் முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிகரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிக முக்கியமானது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் பெற்றிருப்பதிலும் மகிழ்ச்சி. 35 வயது நடிகர், 50 வயது கேரக்டரில் நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை ரொம்ப இலகுவாக நடித்தது ரொம்பவே ஸ்பெஷலான விஷயம். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு வெற்றிமாறன் கூறியுள்ளார்.