துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மூச்சுதிணறல் காரணமாக நடிகர் கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வந்த கார்த்திக், அரசியல் என பாதை மாறியதால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்கு பின் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போது, ‛தீ இவன்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் மனித உரிமை காக்கும் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். நடைபெறும் சட்டசபை தேர்தலில் அதிமுக ., - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுக்காக பிரச்சாரம் செய்ய போவதாகவும் அறிவித்தார். கட்சி தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் ‛நெகட்டிவ்' என ரிசல்ட் வந்துள்ளது.