துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ஜவுளிக்கடை அதிபர் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். அவரே தயாரிக்கும் இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்குகிறார்கள். ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுட்லா நாயகியாக நடிக்க, பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்பான போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவரின் சண்டைக்காட்சி போட்டோக்கள் வெளியான நிலையில் இப்போது குலுமணாலியில் எடுக்கப்பட்டு வரும் படப்பிடிப்பு ஸ்டில்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
படத்தில் சரவணன் உடன் நடித்து வரும் விவேக் கூறுகையில், ''சரவணனின் நடிப்பை பார்க்கவே நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நம்புகிறேன். அருமையான கதையை எடுத்து வருகின்றனர் இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி. படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்குகிறார்கள். மக்கள் ரசிக்கும்படியான படமாக இருக்கும். அவருடன் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்கிறார்.