ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜவுளிக்கடை அதிபர் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். அவரே தயாரிக்கும் இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்குகிறார்கள். ஹிந்தி நடிகை ஊர்வசி ரவுட்லா நாயகியாக நடிக்க, பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தொடர்பான போட்டோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் அவரின் சண்டைக்காட்சி போட்டோக்கள் வெளியான நிலையில் இப்போது குலுமணாலியில் எடுக்கப்பட்டு வரும் படப்பிடிப்பு ஸ்டில்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனது.
படத்தில் சரவணன் உடன் நடித்து வரும் விவேக் கூறுகையில், ''சரவணனின் நடிப்பை பார்க்கவே நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நம்புகிறேன். அருமையான கதையை எடுத்து வருகின்றனர் இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி. படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்குகிறார்கள். மக்கள் ரசிக்கும்படியான படமாக இருக்கும். அவருடன் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது என்கிறார்.