7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் | கதை நாயகியான லிஸி ஆண்டனி | முகமூடி அணிந்து ரசிகர்களிடம் நேரடியாக பட விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார் | பிளாஷ்பேக் : கன்னட நாடகத் துறையின் புரட்சியாளர் | பிளாஷ்பேக் : என்ஜினீயர் மோகன், கிரேஸி மோகன் ஆனது எப்படி? | காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் |
கொரோனா பிரச்சினையால் தடைபட்டுள்ள அண்ணாத்த படப்பிடிப்பை மீண்டும் தொடங்க, ரஜினி கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாதம் 8ம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், மார்ச் இறுதி வரை ரஜினி தேதிகள் ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதோடு, அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் நடிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும், அதனை இளம் இயக்குநர்கள் இயக்குகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு, ரஜினி சமீபத்தில் தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோ என சிலமுறை மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.