ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். இவர் நடித்துள்ள 'ம்ம்ம் (சவுண்ட் ஆப் பெயின்)' என்ற மலையாள படம் ஆஸ்கர் விருது போட்டியில் இடம் பெற்றுள்ளது. குரும்ப மொழியில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமான இதில் தமிழில் திமிரு, கொம்பன் பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ஐ.எம்.விஜயன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். விஜிஷ் மணி இயக்கி உள்ளார்.
இதுப்பற்றி செம்மலர் கூறுகையில், குரும்ப இன மக்களின் முக்கிய தொழில் தேன் எடுப்பது. அது தொடர்பான கதை தான் இது. கருப்பு நிறத்தில் நடிகை வேண்டும் என என்னை தேர்ந்தெடுத்தனர். 10 நாளில் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படம் படமாக்கப்பட்டது. ஆஸ்கர் பிரிவில் எங்கள் படம் இருப்பது ஆனந்தத்தை தருகிறது. தமிழில் 6 ஆண்டுகளாக நடித்துள்ளேன். மலையாளத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தேன். இப்போது இப்படம் மூலம் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளேன் இப்படி ஒரு வாய்ப்பை தந்த இயக்குனர் விஜிஷ், எடிட்டர் லெனின் உள்ளிட்ட படக்குழுவிற்கு நன்றி என்றார்.