'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! | தக் லைப் : திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்? | 7 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் விஜய் யேசுதாஸ் |
தமிழில் பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் செம்மலர் அன்னம். இவர் நடித்துள்ள 'ம்ம்ம் (சவுண்ட் ஆப் பெயின்)' என்ற மலையாள படம் ஆஸ்கர் விருது போட்டியில் இடம் பெற்றுள்ளது. குரும்ப மொழியில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமான இதில் தமிழில் திமிரு, கொம்பன் பிகில் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த ஐ.எம்.விஜயன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். விஜிஷ் மணி இயக்கி உள்ளார்.
இதுப்பற்றி செம்மலர் கூறுகையில், குரும்ப இன மக்களின் முக்கிய தொழில் தேன் எடுப்பது. அது தொடர்பான கதை தான் இது. கருப்பு நிறத்தில் நடிகை வேண்டும் என என்னை தேர்ந்தெடுத்தனர். 10 நாளில் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படம் படமாக்கப்பட்டது. ஆஸ்கர் பிரிவில் எங்கள் படம் இருப்பது ஆனந்தத்தை தருகிறது. தமிழில் 6 ஆண்டுகளாக நடித்துள்ளேன். மலையாளத்தில் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தேன். இப்போது இப்படம் மூலம் நாயகியாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளேன் இப்படி ஒரு வாய்ப்பை தந்த இயக்குனர் விஜிஷ், எடிட்டர் லெனின் உள்ளிட்ட படக்குழுவிற்கு நன்றி என்றார்.