20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து இந்த வாரம் மார்ச் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் பெற்ற 1.24 கோடி கடனை படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னம் தராததால் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக படத்தை வெளியிட நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
கடைசி நேரத்தில் பெற்ற தடையால் இப்போது படம் வெளியாகுமா ஆகாதா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1.24 கோடி தான் என்பதால் எப்படியும் அதை அடைத்து படத்தை வெளியிட முயற்சிப்பார்கள் என்றே தெரிகிறது.
ஏற்கெனவே சில வருடங்களாக முடங்கியிருந்த படம் இப்போதாவது வருகிறதே என செல்வராகவன் ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் இப்போது தடை என்ற தகவலால் வருத்தமடைந்துள்ளனர். படம் வெளியாக யார் பஞ்சாயத்து செய்யப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.