தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திரையுலகம் கொரானோ தாக்கத்தில் இருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட கூட்டம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வந்தால் மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்ற ஆர்வத்தில் திரையுலகினர் இருந்தார்கள். ஆனால், ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு முன்னர் திட்டமிட்ட புதிய படங்களின் வெளியீடுகளை மாற்றும் எனத் தெரிகிறது.
மார்ச் மாதக் கடைசி வாரத்தில் கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது சந்தேகம்தான். மேலும், திரைப்பட போஸ்டர்களை ஒட்ட சுவர்கள் கூட கிடைக்காது, அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
எனவே, மார்ச் 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'டாக்டர்', ஏப்ரல் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'கர்ணன்' ஆகிய படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் வரலாம் எனச் சொல்கிறார்கள்.