ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ |
திரையுலகம் கொரானோ தாக்கத்தில் இருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட கூட்டம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வந்தால் மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்ற ஆர்வத்தில் திரையுலகினர் இருந்தார்கள். ஆனால், ஏப்ரல் 6ம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு முன்னர் திட்டமிட்ட புதிய படங்களின் வெளியீடுகளை மாற்றும் எனத் தெரிகிறது.
மார்ச் மாதக் கடைசி வாரத்தில் கடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவது சந்தேகம்தான். மேலும், திரைப்பட போஸ்டர்களை ஒட்ட சுவர்கள் கூட கிடைக்காது, அரசியல் கட்சிகளின் போஸ்டர்கள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
எனவே, மார்ச் 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'டாக்டர்', ஏப்ரல் 9ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'கர்ணன்' ஆகிய படங்களின் வெளியீட்டில் மாற்றங்கள் வரலாம் எனச் சொல்கிறார்கள்.