‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால் மீனா உள்ளிட்ட அதே கூட்டணியுடன் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகத்தை 'த்ரிஷ்யம்-2'வாக இயக்கி வெளியிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்திற்கு இணையான த்ரில் மற்றும் திருப்பங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. அதேசமயம் இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள் பலரும், கதை இத்துடன் முடிவதால் 3ஆம் பாகத்துக்கு வாய்ப்பு இல்லையென்றே கருதினார்கள்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் அதற்கான க்ளைமாக்ஸ் காட்சியையும் தான் உருவாக்கி விட்டதாகவும் கூறி ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம்-3க்கான க்ளைமாக்ஸை உருவாக்கிவிட்டேன் அதை மோகன்லாலிடமும், தயாரிப்பாளரிடமும் அதை கூறியபோது அவர்கள் ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனார்கள். அதேசமயம் இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் அது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் நடக்கும்.. அதற்குள் இன்னும் பல விஷயங்களை படத்திற்காக உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.