இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால் மீனா உள்ளிட்ட அதே கூட்டணியுடன் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகத்தை 'த்ரிஷ்யம்-2'வாக இயக்கி வெளியிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்திற்கு இணையான த்ரில் மற்றும் திருப்பங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. அதேசமயம் இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள் பலரும், கதை இத்துடன் முடிவதால் 3ஆம் பாகத்துக்கு வாய்ப்பு இல்லையென்றே கருதினார்கள்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் அதற்கான க்ளைமாக்ஸ் காட்சியையும் தான் உருவாக்கி விட்டதாகவும் கூறி ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம்-3க்கான க்ளைமாக்ஸை உருவாக்கிவிட்டேன் அதை மோகன்லாலிடமும், தயாரிப்பாளரிடமும் அதை கூறியபோது அவர்கள் ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனார்கள். அதேசமயம் இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் அது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் நடக்கும்.. அதற்குள் இன்னும் பல விஷயங்களை படத்திற்காக உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.