எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமுத்திரகனி நடிப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். விஜய் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த தகவல் வெளிவந்ததும் அப்பா பதிவு செய்ய இருக்கும் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. எனது படத்தையோ பெயரையோ அவர் பயன்படுத்தக்கூடாது என்று விஜய் அறிவித்தார்.
மகனின் எதிர்ப்பை தொடர்ந்து கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாபஸ் பெற்றார். என்றாலும் மன்றத்தில் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களை விஜய் களையெடுத்தார். அப்பாவுக்கும், மகனுக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளார். இதற்கு செக்யூர் அவர் சிட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக நான் ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன். அந்த முயற்சியின் முதல்படி தான் இது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய விரிவான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று தெரிகிறது.