இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது சமுத்திரகனி நடிப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். விஜய் மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், அதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பித்தார். இந்த தகவல் வெளிவந்ததும் அப்பா பதிவு செய்ய இருக்கும் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. எனது படத்தையோ பெயரையோ அவர் பயன்படுத்தக்கூடாது என்று விஜய் அறிவித்தார்.
மகனின் எதிர்ப்பை தொடர்ந்து கட்சியாக பதிவு செய்யும் விண்ணப்பத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாபஸ் பெற்றார். என்றாலும் மன்றத்தில் இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆதரவாளர்களை விஜய் களையெடுத்தார். அப்பாவுக்கும், மகனுக்கும் பனிப்போர் நடந்து வரும் நிலையில் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி உள்ளார். இதற்கு செக்யூர் அவர் சிட்டி என்று பெயர் வைத்திருக்கிறார்.
தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக நான் ஒரு முயற்சி எடுத்திருக்கிறேன். அந்த முயற்சியின் முதல்படி தான் இது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றிய விரிவான அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று தெரிகிறது.