கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்காக புதிதாக, 'மாஜ்ஜா' என்ற பெயரில், இசை நிறுவனத்தை ஏ.ஆர்.ரகுமான் துவக்கியுள்ளார். சென்னையில் விரைவில், 'யாழ்' என்ற, இசை திருவிழாவையும், அவர் நடத்த உள்ளார்.
கிராமி மற்றும் ஆஸ்கார் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்; புதிய முயற்சியாக தொழில்நுட்பம் சார்ந்து, 'மாஜ்ஜா' என்ற, புதிய இசை நிறுவனத்தை துவக்கியுள்ளார். அடுத்த தலைமுறை இசை கலைஞர்களின் திறன்மிகு படைப்புகளை, உலகளவில் கொண்டு செல்வதை குறிக்கோளாக கொண்டு, இதை ஆரம்பித்துள்ளார்.அத்துடன், யாழ் இசை திருவிழா வாயிலாக, இளம் திறமையாளர்களையும் வெளிப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து, ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது:மாஜ்ஜா நிறுவனம், சுயாதீன இசை முயற்சிகளுக்கான மேடையாக இருக்கும். படைப்பு சுதந்திரத்தின் முழுமையை அளிப்பதுடன், திறமையாளர்களை உலகளவில் எடுத்து செல்வதே, இதன் குறிக்கோள்.திறமையாளர்கள் பலர் உள்ளனர். அவர்கள், எந்த ஒரு அடையாளமும் வெளிப்படாமலேயே, காணாமல் போய்விடுகின்றனர். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், திறமையானவர்களுக்கான தடைகள் உடைக்கப்படும். தொழில் நுட்பத்தால் இசைக்கலைஞர்களுக்கு புது யுகம் படைப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.