தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ சமூகவலைதளத்தில் எப்போதும் பேசுபொருளாக இருப்பவர் நடிகர் வடிவேலு. கடந்த பத்தாண்டுகளாக அவர் நடிக்காத போதும், அவரது புகைப்படங்கள் தான் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆல் டைம் பேவரைட். இதனாலேயே எப்போதும் சமூகவலைதளங்களில் வடிவேலுவின் புகைப்படத்தை பார்க்க முடியும்.
இந்த சூழ்நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வடிவேலு பேசியது வைரலானது. “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை என அவர் உருக்கமாகப் பேசியது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது.
விரைவில் அவர் சூர்யா நடிக்கும் படம் மற்றும் திருமுருகன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையானால் நிச்சயம் மீண்டும் வடிவேலு பிஸியாகி விடுவார் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை மீரா மிதுன், வடிவேலு பற்றி பேசியிருக்கிறார். அதில், 'வடிவேலுவின் பேச்சு உருக்கமாக இருந்ததாகவும், தான் விரைவில் ஒரு படம் தயாரிக்க இருப்பதாகவும், விருப்பமிருந்தால் அதில் அவர் நடிக்கலாம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம். உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது” எனவும் அவர் கூறியுள்ளார்.