அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி7ம் தேதி அன்று தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர், அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக், பிப்ரவரி11-ந்தேதி அன்று சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டதாகவும், வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் தனது டுவிட்டரில், சூர்யாவிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக ஒரு மகிழ்ச்சி செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.