சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் சூர்யா கடந்த பிப்ரவரி7ம் தேதி அன்று தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர், அனைவரும் பாதுகாப்புடன் இருக்குமாறும் தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதன்பிறகு சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்திக், பிப்ரவரி11-ந்தேதி அன்று சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து விட்டதாகவும், வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் தனது டுவிட்டரில், சூர்யாவிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்திருப்பதாக ஒரு மகிழ்ச்சி செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.