சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? |
தொகுப்பாளினியாக இருந்த ரம்யா சுப்பிரமணியம் இப்போது நடிகை. திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்த ரம்யா, விவாகரத்துக்கு பிறகு தீவிரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார். மொழி படத்தில் தொடங்கிய அவரது பயணம் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை, மாஸ்டர் என வளர்ந்தது.
இப்போது முதன் முறையாக சங்கத்தலைவன் என்ற படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார். இது தறியுடன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவனாக சமுத்திரகனியும், அவரது மனைவியாக ரம்யாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், மாரிமுத்து, சுனுலட்சுமி, பாலாசிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார், ஸ்ரீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிமாறன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் நெசவாளர்களின் வாழ்வியில் கதை. தங்களின் வாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் போராட்டத்திலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிக்கும் ஒரு புரட்சிக்காரனின் கதை. இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. நாவலில் சொல்லப்பட்ட இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்பட்டு உண்மைக்கு மிக நெருக்கமாக படம் உருவாகி உள்ளது. என்கிறார்.