சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தொகுப்பாளினியாக இருந்த ரம்யா சுப்பிரமணியம் இப்போது நடிகை. திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்த ரம்யா, விவாகரத்துக்கு பிறகு தீவிரமாக நடிக்க ஆரம்பித்து விட்டார். மொழி படத்தில் தொடங்கிய அவரது பயணம் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை, மாஸ்டர் என வளர்ந்தது.
இப்போது முதன் முறையாக சங்கத்தலைவன் என்ற படத்தில் கதை நாயகியாக நடித்துள்ளார். இது தறியுடன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சங்கத் தலைவனாக சமுத்திரகனியும், அவரது மனைவியாக ரம்யாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், மாரிமுத்து, சுனுலட்சுமி, பாலாசிங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார், ஸ்ரீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிமாறன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நின்று கொண்டே வேலை செய்யும் நெசவாளர்களின் வாழ்வியில் கதை. தங்களின் வாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் போராட்டத்திலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிக்கும் ஒரு புரட்சிக்காரனின் கதை. இதனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் திரைக்கதை. நாவலில் சொல்லப்பட்ட இடங்களிலேயே படப்பிடிப்பும் நடத்தப்பட்டு உண்மைக்கு மிக நெருக்கமாக படம் உருவாகி உள்ளது. என்கிறார்.