கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா |
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்க எஸ்பி ஜனநாதன் இயக்கி வரும் படம் 'லாபம்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற போது படப்பிடிப்பிலிருந்து திடீரென வெளியேறினார் ஸ்ருதிஹாசன்.
அப்படி அவர் வெளியேறும் போது படத்தின் இயக்குனரான ஜனநாதனிடம் கூட சொல்லாமல் வெளியேறியது இப்போது தெரிய வந்துள்ளது. அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் ஜனநாதன்.
படத்தின் படப்பிடிப்பு அப்போது நடந்த போது திடீரென ரசிகர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துள்ளனர். அவர்களுடன் விஜய் சேதுபதி, ஜெகபதிபாபு ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது கொரானோ தொற்று குறையாத நேரம். பாதுகாப்பு அம்சங்களுடன்தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இருந்தாலும் அவர்கள் ரசிகர்களை அப்படி சந்தித்துப் பேசியது பிடிக்காமல் ஸ்ருதிஹாசன் வெளியேறி இருக்கிறார். அப்படி போகும் போது அவர் இயக்குனரிடம் கூட சொல்லவில்லையாம்.
ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் படமாக வேண்டி இருந்தாலும் அவை படத்தில் இல்லையென்றாலும் பரவாயில்லை என அத்துடன் ஸ்ருதிஹாசனை படப்பிடிப்புக்கு அழைக்காமல் புறக்கணித்திருக்கிறார் இயக்குனர்.
அடுத்து ஸ்ருதிஹாசன் டப்பிங் பேச வருவாரா இல்லையா என்பது சந்தேகம்தான். அவருக்குப் பதிலாக வேறு யாராவது டப்பிங் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் ஸ்ருதிஹாசன் பங்கேற்க மாட்டார் என்றே தெரிகிறது.