'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
இந்திய மக்களையும், இந்துக் கடவுள்களையும் அவமதிக்கும் செயல்களை வெளிநாடுகளில் உள்ள சில பிரபலங்கள் தொடர்ந்து செய்து கண்டனத்திற்கு ஆளாகிறார்கள்.
விவசாயிகள் பிரச்சினையில் குரல் கொடுத்த பாடகியும், நடிகையுமான ரிஹானா நேற்று டுவிட்டர் தளத்தில் ஆபாசப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தால். வெறும் குட்டி டிரவுசரை மட்டும் அணிந்து மேலாடை எதுவுமில்லாமல் மார்பகப் பகுதிகளை தன் கையால் மூடியபடி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படத்தில் அவருடைய கழுத்து செயினில் வினாயகர் உள்ள டாலர் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அதற்கு இந்து மக்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து அவருக்கு கமெண்ட் செய்துள்ளனர். ஏற்கெனவே, இந்திய விவசாயிகள் போராட்டப் பிரச்சினையில் அவர் குரல் கொடுத்ததற்கு இங்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது வேண்டுமென்றே அவர் இந்துக் கடவுளை அவமதிக்கும் விதமாக இப்படி போஸ் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.