நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

புதுடில்லி: புகழ்பெற்ற இந்தி நடிகர் மிதுன்சக்கரவர்த்தி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இடையே சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அவர் பா.ஜ.,வில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தி திரைப்படங்களில் டிஸ்கோ டான்சர் நடிகர் என அனைவராலும் அழைக்கப்படுபவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் மேற்கு வங்க மாநிலத்தின் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
விரைவில் மே.வங்க மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரசை வீழ்த்துவதற்காக பா.ஜ., வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்,ஏக்கள் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ.,கட்சியின் மாநில பொறுப்பாளர் கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில் மிதுன் வங்காளத்தில் மிகவும் மதிக்கப்படுபவர். அவர் பா.ஜ.,வில் சேர விரும்பினார் வரவேற்கப்படுவார். என தெரிவித்துள்ளார்.