நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களை முடித்துவிட்ட தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் தனது 43வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷும் மாளவிகா மோகனனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவருமே புலனாய்வு பத்திரிகை நிருபர்களாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் அவரது மனைவியும் கார் விபத்தில் கொல்லப்பட, அவர்களது மகன் தனது தந்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை ஒரு பத்திரிகையாளராக கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.