இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களை முடித்துவிட்ட தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் தனது 43வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷும் மாளவிகா மோகனனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவருமே புலனாய்வு பத்திரிகை நிருபர்களாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் அவரது மனைவியும் கார் விபத்தில் கொல்லப்பட, அவர்களது மகன் தனது தந்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை ஒரு பத்திரிகையாளராக கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.