டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்களை முடித்துவிட்ட தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் தனது 43வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து தனுஷும் மாளவிகா மோகனனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்த படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவருமே புலனாய்வு பத்திரிகை நிருபர்களாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிரபல பத்திரிக்கையாளர் ஒருவரும் அவரது மனைவியும் கார் விபத்தில் கொல்லப்பட, அவர்களது மகன் தனது தந்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை ஒரு பத்திரிகையாளராக கண்டுபிடிப்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.