ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

படம் : மன்மதன்
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : சிம்பு, ஜோதிகா, கவுண்டமணி, சந்தானம், சிந்து துலானி
இயக்கம் : ஏ.ஜே.முருகன்
தயாரிப்பு : எஸ்.கே.கிருஷ்ணகாந்த்
கதாநாயகனாக சிம்பு நடிக்க துவங்கி, வெள்ளி விழா கண்ட முதல் படம், மன்மதன். கதை, திரைக்கதை, இயக்கம் மேற்பார்வை என, முழுக்க முழுக்க சிம்புவின் கைவண்ணத்தில் உருவான படம் இது. ஏ.ஜே.முருகன் பெயர், இயக்குனர் என, இடம்பெற்றிருந்தாலும், அப்பணியையும் சிம்புவே மேற்கொண்டார்.
சிவப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை தான், கொஞ்சம், 'பட்டி டிங்கரிங்' பார்த்து, மன்மதன் கதையை உருவாக்கியிருந்தனர். சிம்பு, முதல்முறை இரட்டை வேடத்தில் நடித்தார். ஒட்ட வெட்டிய கிராப் தலை; அப்பாவித்தனமான முக பாவங்களோடு வலம் வந்த, கிராமத்து வாசமுடைய தம்பி மதன்ராஜ், அனுதாபத்தை அள்ளினார். அதேபோல, நவநாகரீக தோற்றத்தில் இருக்கும் அண்ணன் மதன்குமார், பெண்களை கொலை செய்யும், 'சைக்கோ' தனமான நடிப்பை காட்டி, மிரளச் செய்தார்.
இப்படத்தில் வடமாநில மாடல் அழகி, யானா குப்தா; உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கிய கவர்ச்சி புயல், மந்திரா பேடி; அப்புறம் நம் ஜோதிகா என, அழகிகளும் அணிவகுத்தனர். ஆபாச காட்சிகளும், கொலைகளும் இடம் பெற்றதால், இப்படத்திற்கு தணிக்கை குழு, 'ஏ' சான்றிதழ் வழங்கியது.
சினிமா பயணத்தில், தனுஷுக்கு எதிராக சிம்பு என்ற பிம்பம், இப்படத்தில் இருந்து தான் உருவானது. இப்படம், பெரும் வெற்றியை பெற்றது. தெலுங்கில், மன்மதா என்ற பெயரில், 'டப்பிங்' செய்யப்பட்டும், கன்னடத்தில், மதனா என்ற பெயரில், 'ரீமேக்'கும் செய்யப்பட்டது. படத்தின் வெற்றியில், யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கும் முக்கிய பங்கு உண்டு. 'தத்தை தத்தை, மன்மதனே நீ, என் ஆசை மைதிலியே, காதல் வளர்த்தேன்...' பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.
மிரளச் செய்தான் மன்மதன்!