பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

திரைப்பட நடிகைகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகைகள் பலரும் 50 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளார்கள்.
ஆனால், தென்னிந்திய நடிகைகள் அதிகபட்சமாக 15 மில்லியன் பாலோயர்களை மட்டுமே பெற்றுள்ளார்கள். இதுவரையில் அதிக பாலோயர்களைப் பெற்ற நடிகையாக காஜல் அகர்வால் உள்ளார். அவருக்கு 17.3 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்து ரகுல் ப்ரீத் சிங் 16.2 மில்லியன் பாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஸ்ருதிஹாசன் 15.7 மில்லியன் பாலோயர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தற்போது நடிகை சமந்தா 15 மில்லியன் பாலோயர்களைப் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்ற இளம் முன்னணி நடிகைகளான ராஷ்மிகா, பூஜா ஹெக்டே ஆகியோர் 12 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளனர்.
திருமணமான பின்னும் சமந்தா தனக்கான இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படத்திலும், தெலுங்கில் விரைவில் 'சாகுந்தலம்' படத்திலும் நடிக்க உள்ளார்.