ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-, விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படம் ஓடிய தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனபோதும் படம் வெளியான நாளில் இருந்தே படத்தின் வசூலை பற்றி எக்குதப்பான தகவல்கள் வருகின்றன. தற்போது வரை 200 கோடி வசூல் என சொல்லப்படுகிறது. சிலர் 300 கோடி என சமூகவலைதளங்களில் கிளப்பிவிட்டுள்ளனர்.
இப்படித்தான் முன்பு பிகில் படம் வெளியானபோதும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வசூல் செய்தியை வெளியிட்டு அந்நிறுவனத்தை ஐடி ரெய்டில் சிக்க வைத்தார்கள். அதேபோன்று தான் இப்போது மாஸ்டர் படத்தின் வசூலையும் தாறுமாறாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என ஒரு பக்கம் விமர்சனமும் வருகிறது
இப்படியான நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அப்பட வசூல் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''200 கோடி, 300 கோடி வசூல் என்று சொல்வதை என்னவென்றே புரியாமல் ரசிகர்கள் பரபரப்பாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எல்லாம் படத்தை விற்கப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு மேல் பணம் வந்தால் தான் அது லாபம் ஆகும் என்று கூறியுள்ள சேவியர் பிரிட்டோ, 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு இவ்வளவு வசூல் வந்தது எதிர்பாராத ஒன்று தான். அந்த வகையில், வைரஸ் தொற்று நேரத்தில் இந்த அளவுக்கு மாஸ்டர் வசூலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.