காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-, விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம் மாஸ்டர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இப்படம் ஓடிய தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனபோதும் படம் வெளியான நாளில் இருந்தே படத்தின் வசூலை பற்றி எக்குதப்பான தகவல்கள் வருகின்றன. தற்போது வரை 200 கோடி வசூல் என சொல்லப்படுகிறது. சிலர் 300 கோடி என சமூகவலைதளங்களில் கிளப்பிவிட்டுள்ளனர்.
இப்படித்தான் முன்பு பிகில் படம் வெளியானபோதும் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய வசூல் செய்தியை வெளியிட்டு அந்நிறுவனத்தை ஐடி ரெய்டில் சிக்க வைத்தார்கள். அதேபோன்று தான் இப்போது மாஸ்டர் படத்தின் வசூலையும் தாறுமாறாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என ஒரு பக்கம் விமர்சனமும் வருகிறது
இப்படியான நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ அப்பட வசூல் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ''200 கோடி, 300 கோடி வசூல் என்று சொல்வதை என்னவென்றே புரியாமல் ரசிகர்கள் பரபரப்பாக்கி வருகிறார்கள். ஆனால் அவை எல்லாம் படத்தை விற்கப்பட்ட தொகையாகும். இந்த தொகைக்கு மேல் பணம் வந்தால் தான் அது லாபம் ஆகும் என்று கூறியுள்ள சேவியர் பிரிட்டோ, 50 சதவிகிதம் இருக்கைகளுக்கு இவ்வளவு வசூல் வந்தது எதிர்பாராத ஒன்று தான். அந்த வகையில், வைரஸ் தொற்று நேரத்தில் இந்த அளவுக்கு மாஸ்டர் வசூலிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்றும் தெரிவித்துள்ளார்.




