கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
நடிகை சரண்யாவும், இயக்குனர் பொன்வண்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது பொன்வண்ணன் சினிமா, தொலைக்காட்சி தொடர்களிலும், சரண்யா திரைப்படங்களில் அம்மா வேடத்திலும் நடித்து வருகிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சினிமாவுக்கு வரமாட்டார்கள் என்று ஏற்கெனவே சரண்யா அறிவித்து விட்டார். இந்த நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு பெரியவர்கள் திருமணம் பேசி முடித்துள்ளனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
இது தனிப்பட்ட குடும்ப விழா என்பதால் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை. திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க இருக்கிறார்கள். மணமகன் குறித்த தகவல் எதையும் சரண்யா வெளியிடவில்லை. நிச்சயதார்த்த படங்கள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளளது.