'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 30 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது திருப்பதியில் உள்ள பவன் தன்னுடைய சிறிய நன்கொடை இது என தெரிவித்துள்ளார். அவருடைய ஜனசேனா கட்சியில் உள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் அளித்த நன்கொடைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
“எத்தனையோ தாக்குதல்களுக்கு மத்தியிலும் நம் நாடு பல நூற்றாண்டுகளாக வலிமையுடன் இருந்து வருகிறது. ராமர் உருவாக்கி வைத்த உத்வேகம்தான் அதற்குக் காரணம். இந்த பூமியில் அமைதி தழைத்தோங்க ராமர் தான் காரணம். நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு. இங்குதான் மக்கள் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராமரின் ஆட்சி தான் மக்களிடையே பொறுமை உருவாக காரணமாக இருந்தது. ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அவர்களாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகிறார்கள்,” என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து முதல் சினிமா பிரபலமாக ராமர் கோயில் கட்ட நன்கொடை அளித்துள்ளார் பவன் கல்யாண். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் நன்கொடை அளிக்க முன்வருவார்கள் எனத் தெரிகிறது.