ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் இயக்குனர் சாஜித் கான். ஹவுஸ்புல் முதல் மற்றும் 2ம் பாகம், ஹிம்மத்வாலா, ஹம்ஸ்கல், ஹேய் பேபி உள்பட பல படங்களை இயக்கி உள்ளார். ஹேப்பி நியூ ஈயர் உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் பராக்கானின் சகோதரர் ஆவார்.
இவர் மீது இப்போது பாலிவுட் கவர்ச்சி நடிகை ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார் கூறியுள்ளார். ஷெர்லின் சோப்ரா காமசூத்ரா, தோஸ்தி, கேம், பீப்பர், யுனிவர்சிட்டி, எ பிலிம் பை அரவிந்த் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர். இந்தி பிக்பாஸ் 3வது சீசனிலும் கலந்து கொண்டவர்.
அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் 2005ம் ஆண்டு சாஜித்கானை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். நான் இதற்காக இங்கு வரவில்லை என்று அவரிடம் தெரிவித்தேன். இந்த பாலியல் குற்றச்சாட்டை அப்போது சொல்லி இருந்தால் அவருக்கு இந்தி நடிகர்கள் ஆதரவாக பேசி இருப்பார்கள். இந்தி திரையுலக மாபியா வலிமையானது.
நான் சாஜித் மீது பழிசுமத்தவில்லை. நடந்த உண்மையை கூறுகிறேன். என் தந்தை இறந்ததும் துக்கத்தில் இருந்தபோது படம் குறித்து பேசுவதாக என்னை சாஜித்கான் அழைத்து தவறாக நடந்தார். நான் மறுத்தும் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்தார். என்று தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சாஜித்கான் மீது நடிகைகள் ராச்சல், டிம்பிள் பாவ்லா, உதவி இயக்குனர் சலோனி சோப்ரா உள்ளிட்ட பலர் பாலியல் புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.