ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகரின் விமலின் சொந்த ஊர் மணப்பாறை அருகே உள்ள பண்ணாங்கொம்பு. விமலின் பூர்வீக வீடு இங்கு உள்ளது. அவரது வீட்டுக்கு எதிரில் இருக்கும் காலி மைதானத்தில் விளக்குதூண் ஒன்று உள்ளது. இதனை ஊர் மக்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர். சமீபத்தில் விளக்குதூணை சுற்றி சிறிய மேடை ஒன்றை ஊர்காரர்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், விளக்கு தூண் மேடையை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளி உள்ளது. இது விமல் குடும்பத்தினரின் வேலை என்று அதே ஊரைச் சேர்ந்த கோவில் பூசாரி செல்வம் புத்தாநத்தம் போலீசில் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா உத்தரவிட்டுள்ளார்.