'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சமீபகாலமாக சினிமா கலைஞர்கள் மரக்கன்றுகள் நடும் கிரீன் இந்தியா சாவலை முன்னெடுத்து வருவது தெரிந்ததே. அந்த வகையில், தெலுங்கானா எம்.பி சந்தோஷ்குமார் என்பவர் தற்போது கிரீன் இந்தியா சவாலை முன்னெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ்-4 சீசன் போட்டியாளர் தேவி நாகவல்லி என்பவர் நடிகை மீனாவிற்கு கிரீன் இந்தியா சவால் விடுத்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்ட மீனா, சுற்றுச்சூழல் மாறிக்கொண்டே இருப்பதால் பசுமையை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இது இயற்கைக்கும், மண்ணிற்கும் நான் செய்யும் நன்றிக்கடன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த சவாலை தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் சுதீப், நடிகைகள் மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர சொல்லி சவால் விடுத்துள்ளார் மீனா.