அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீபகாலமாக சினிமா கலைஞர்கள் மரக்கன்றுகள் நடும் கிரீன் இந்தியா சாவலை முன்னெடுத்து வருவது தெரிந்ததே. அந்த வகையில், தெலுங்கானா எம்.பி சந்தோஷ்குமார் என்பவர் தற்போது கிரீன் இந்தியா சவாலை முன்னெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ்-4 சீசன் போட்டியாளர் தேவி நாகவல்லி என்பவர் நடிகை மீனாவிற்கு கிரீன் இந்தியா சவால் விடுத்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்ட மீனா, சுற்றுச்சூழல் மாறிக்கொண்டே இருப்பதால் பசுமையை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இது இயற்கைக்கும், மண்ணிற்கும் நான் செய்யும் நன்றிக்கடன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த சவாலை தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் சுதீப், நடிகைகள் மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர சொல்லி சவால் விடுத்துள்ளார் மீனா.