இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

சமீபகாலமாக சினிமா கலைஞர்கள் மரக்கன்றுகள் நடும் கிரீன் இந்தியா சாவலை முன்னெடுத்து வருவது தெரிந்ததே. அந்த வகையில், தெலுங்கானா எம்.பி சந்தோஷ்குமார் என்பவர் தற்போது கிரீன் இந்தியா சவாலை முன்னெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸ்-4 சீசன் போட்டியாளர் தேவி நாகவல்லி என்பவர் நடிகை மீனாவிற்கு கிரீன் இந்தியா சவால் விடுத்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்ட மீனா, சுற்றுச்சூழல் மாறிக்கொண்டே இருப்பதால் பசுமையை பாதுகாப்பது நம்முடைய கடமையாகும். இது இயற்கைக்கும், மண்ணிற்கும் நான் செய்யும் நன்றிக்கடன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த சவாலை தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் சுதீப், நடிகைகள் மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தொடர சொல்லி சவால் விடுத்துள்ளார் மீனா.