டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பலரும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சிரஞ்சீவிக்குப் பிறகு அவரது தம்பி பவன் கல்யாண், ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இன்னும் சொல்லப் போனால் சிரஞ்சீவியை விட பவனுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
பவன் கல்யாண், ராம் சரண் இருவரும் அடுத்து தமிழ் இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் டோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. அதனால், இந்திய அளவில் ஒரு படத்தைக் கொடுக்க ஷங்கர் முயற்சித்து வருகிறாராம். தற்போதைக்கு தமிழ் ஹீரோக்களை விட தெலுங்கு ஹீரோக்கள் தான் 'பான் இந்தியா' அளவில் ரீச் ஆகியுள்ளனர். அதிலும், ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். அப்படம் வெளிவந்த பின் ராம் சரண் இந்திய அளவில் பேசப்படுவார் என எதிர்பார்த்தே அவரை தன் படத்தில் நடிக்க வைக்க ஷங்கர் பேசி வருகிறாராம். மேலும், இப்படத்தில் மற்ற மொழி ஹீரோக்களும் நடிக்கலாம் என்ற ஒரு தகவல் உள்ளது.
'இந்தியன் 2' அடுத்த மாதம் கூட ஆரம்பமாகவில்லை என்றால் ஷங்கர் இந்த புதிய படத்தை இயக்கப் போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.