மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு | 30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பலரும் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சிரஞ்சீவிக்குப் பிறகு அவரது தம்பி பவன் கல்யாண், ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். இன்னும் சொல்லப் போனால் சிரஞ்சீவியை விட பவனுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
பவன் கல்யாண், ராம் சரண் இருவரும் அடுத்து தமிழ் இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கப் போவதாக ஒரு தகவல் டோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2' படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. அதனால், இந்திய அளவில் ஒரு படத்தைக் கொடுக்க ஷங்கர் முயற்சித்து வருகிறாராம். தற்போதைக்கு தமிழ் ஹீரோக்களை விட தெலுங்கு ஹீரோக்கள் தான் 'பான் இந்தியா' அளவில் ரீச் ஆகியுள்ளனர். அதிலும், ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடித்து வருகிறார். அப்படம் வெளிவந்த பின் ராம் சரண் இந்திய அளவில் பேசப்படுவார் என எதிர்பார்த்தே அவரை தன் படத்தில் நடிக்க வைக்க ஷங்கர் பேசி வருகிறாராம். மேலும், இப்படத்தில் மற்ற மொழி ஹீரோக்களும் நடிக்கலாம் என்ற ஒரு தகவல் உள்ளது.
'இந்தியன் 2' அடுத்த மாதம் கூட ஆரம்பமாகவில்லை என்றால் ஷங்கர் இந்த புதிய படத்தை இயக்கப் போனால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.