சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
பொதுவாக நடிகைகள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக்கூடிய வர்கள். யாரையாவது காதலித்தால் உடனே அவர்களின் பெயரை தங்களது உடம்பில் ஏதாவரு ஒரு பகுதியில் பச்சைக்குத்திக்கொள்வார்கள். அப்படித்தான் முன்பு பிரபுதேவாவை காதலித்தபோது அவரது பெயரை தனது கையில் பச்சைக் குத்திக்கொண்டார் நயன்தாரா. காதல் முறிந்த பிறகு அந்த பெயரை வேறு டாட்டூவாக மாற்றினார்.
அதேபோல்தான் கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதையடுத்து முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக வனிதாவை நோக்கி ஏராளமான விமர்சனக்கணைகள் பாய்ந்தன.
ஆனபோதும் கலங்காத வனிதா, பீட்டர் பாலுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வனிதா-பீட்டர் பாலின் உறவும் முடிவுக்கு வந்து, வனிதாவை விட்டு வெளியேறினார் பீட்டர் பால்.
ஆனால் வனிதாவும், பீட்டர் பாலும் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது ஒருவர் பெயரை இன்னொருவரின் கையில் பச்சைக்குத்திக்கொண்டனர். இந்நிலையில் தற்போது தனது கையில் உள்ள பீட்டர்பாலின் பெயரை வேறு ஒரு சிம்பிளாக மாற்றியுள்ளார் வனிதா. அதை மாற்றுவதையும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதோடு, இனிமேல் யாருடைய பெயரையும் எனது கையில் பச்சைக்குத்த மாட்டேன் என்றும் உறுதி எடுத்துள்ளார் வனிதா.