தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ஐந்து அணிகள் மோதல் | கிரிக்கெட் வெப் தொடரில் அறிமுகமாகும் விக்ராந்த் | வாழ்ந்த தெருவுக்கு மனோராமா பெயர்: முதல்வருக்கு நடிகர் சங்கம் கடிதம் | சாதாரண மனிதராக என்னை வாழவிடுங்கள் : பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நடிகை உருக்கம் | சூதாட்ட செயலி வழக்கு : பாலிவுட் நடிகர், நடிகைகள் சொத்துக்கள் முடக்கம் | பிளாஷ்பேக்: விஜயகாந்திற்கு 'புரட்சி கலைஞர்' பட்டம் கொடுத்த எஸ்.தாணு | பிளாஷ்பேக் : மெட்டுக்கு உரிமை கேட்டு வழக்கு: நீதிபதி வழங்கிய அசத்தல் தீர்ப்பு | பிரபல மலையாள நடிகர் சீனிவாசன் காலமானார் | இயக்குனர் லிங்குசாமிக்கு ஓராண்டு சிறை | ஜேசன் சஞ்சயின் ‛சிக்மா' படப்பிடிப்பு நிறைவு : டீசர் டிச., 23ல் வெளியீடு |

பொதுவாக நடிகைகள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக்கூடிய வர்கள். யாரையாவது காதலித்தால் உடனே அவர்களின் பெயரை தங்களது உடம்பில் ஏதாவரு ஒரு பகுதியில் பச்சைக்குத்திக்கொள்வார்கள். அப்படித்தான் முன்பு பிரபுதேவாவை காதலித்தபோது அவரது பெயரை தனது கையில் பச்சைக் குத்திக்கொண்டார் நயன்தாரா. காதல் முறிந்த பிறகு அந்த பெயரை வேறு டாட்டூவாக மாற்றினார்.
அதேபோல்தான் கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதையடுத்து முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக வனிதாவை நோக்கி ஏராளமான விமர்சனக்கணைகள் பாய்ந்தன.
ஆனபோதும் கலங்காத வனிதா, பீட்டர் பாலுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வனிதா-பீட்டர் பாலின் உறவும் முடிவுக்கு வந்து, வனிதாவை விட்டு வெளியேறினார் பீட்டர் பால்.
ஆனால் வனிதாவும், பீட்டர் பாலும் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது ஒருவர் பெயரை இன்னொருவரின் கையில் பச்சைக்குத்திக்கொண்டனர். இந்நிலையில் தற்போது தனது கையில் உள்ள பீட்டர்பாலின் பெயரை வேறு ஒரு சிம்பிளாக மாற்றியுள்ளார் வனிதா. அதை மாற்றுவதையும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதோடு, இனிமேல் யாருடைய பெயரையும் எனது கையில் பச்சைக்குத்த மாட்டேன் என்றும் உறுதி எடுத்துள்ளார் வனிதா.