சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பொதுவாக நடிகைகள் ரொம்பவே உணர்ச்சிவசப்படக்கூடிய வர்கள். யாரையாவது காதலித்தால் உடனே அவர்களின் பெயரை தங்களது உடம்பில் ஏதாவரு ஒரு பகுதியில் பச்சைக்குத்திக்கொள்வார்கள். அப்படித்தான் முன்பு பிரபுதேவாவை காதலித்தபோது அவரது பெயரை தனது கையில் பச்சைக் குத்திக்கொண்டார் நயன்தாரா. காதல் முறிந்த பிறகு அந்த பெயரை வேறு டாட்டூவாக மாற்றினார்.
அதேபோல்தான் கடந்த ஆண்டில் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா விஜயகுமார். அதையடுத்து முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து கொள்ளாத ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக வனிதாவை நோக்கி ஏராளமான விமர்சனக்கணைகள் பாய்ந்தன.
ஆனபோதும் கலங்காத வனிதா, பீட்டர் பாலுடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தார். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வனிதா-பீட்டர் பாலின் உறவும் முடிவுக்கு வந்து, வனிதாவை விட்டு வெளியேறினார் பீட்டர் பால்.
ஆனால் வனிதாவும், பீட்டர் பாலும் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது ஒருவர் பெயரை இன்னொருவரின் கையில் பச்சைக்குத்திக்கொண்டனர். இந்நிலையில் தற்போது தனது கையில் உள்ள பீட்டர்பாலின் பெயரை வேறு ஒரு சிம்பிளாக மாற்றியுள்ளார் வனிதா. அதை மாற்றுவதையும் வீடியோ எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அதோடு, இனிமேல் யாருடைய பெயரையும் எனது கையில் பச்சைக்குத்த மாட்டேன் என்றும் உறுதி எடுத்துள்ளார் வனிதா.