பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகளில் ஒன்றாக நவ., 10ல் முதல் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் தீபாவளியை முன்னிட்டும் கடந்த இரண்டு மாத காலமாகவும் சுமார் 40 படங்கள் வெளிவந்தன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கமே வரவில்லை. அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக வர மறுக்கிறார்கள் என்றே பேசப்பட்டது. அதேசமயம், ரசிகர்களை வரவழைக்கும் விதத்தில் முன்னணி நடிகர்களின் படங்களோ, தரமான படங்களோ வரவில்லை என்பதைப் பற்றி வெளிப்படையாக பேச மறுத்தார்கள்.
முன்னணி நடிகர்களின் படங்கள் தான் ரசிகர்களை வரவழைக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கம். விஜய் நடித்து வெளிவர உள்ள 'மாஸ்டர்' படத்திற்கான முன்பதிவு ஆரம்பமானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
13ம் தேதி புதன்கிழமை வெளியாகும் படத்திற்கு 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு ஏறக்குறைய முன்பதிவு முடிந்துவிட்டது. முக்கிய மாநகரங்கள், நகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இருக்கைகள் காலியாக உள்ளன. அவையும் அடுத்த சில நாட்களில் நிறைந்துவிடும் என்கிறார்கள்.
கொரோனா தொற்று பயத்தையும் மீறி 'மாஸ்டர்' படத்திற்கு இப்படி ஒரு முன்பதிவு நடப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் முன்பதிவு நிலவரம் நிறைவாக உள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.