ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா. தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். குட்டி ராதிகாவை கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி 2வது திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
தற்போது குட்டி ராதிகா ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார். பெங்களூரில் பல்வேறு மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜோதிடர் யுவராஜ் சாமி என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் குட்டி ராதிகாவுக்கு 1 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
இதனை குட்டி ராதிகாவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த ஜோதிடர் தயாரிக்கும் படத்திற்கு சம்பளமாகத்தான் அந்த பணத்தை பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் குட்டி ராதிகாவிடம விசாரணை நடத்தினார்கள். முன்னாள் முதல்வரின் மனைவி மோசடி வழக்கில் சிக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த குமாரசாமி "நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களை பற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்" என்று கோபத்தோடு கூறினார்.