பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா. தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். குட்டி ராதிகாவை கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி 2வது திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.
தற்போது குட்டி ராதிகா ஒரு சிக்கலில் மாட்டி உள்ளார். பெங்களூரில் பல்வேறு மோசடி வழக்கில் கைதாகி உள்ள ஜோதிடர் யுவராஜ் சாமி என்பவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் குட்டி ராதிகாவுக்கு 1 கோடியே 50 லட்சம் கொடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
இதனை குட்டி ராதிகாவும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த ஜோதிடர் தயாரிக்கும் படத்திற்கு சம்பளமாகத்தான் அந்த பணத்தை பெற்றதாக அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் குட்டி ராதிகாவிடம விசாரணை நடத்தினார்கள். முன்னாள் முதல்வரின் மனைவி மோசடி வழக்கில் சிக்கி இருப்பது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த குமாரசாமி "நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்றே எனக்கு தெரியாது. தெரியாதவர்களை பற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்" என்று கோபத்தோடு கூறினார்.