அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கிய குற்றம் 23 படம் அருண்விஜய்க்கு திருப்பம் தந்த படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அருண் விஜய்யின் 31வது படத்தை இயக்கி முடித்துள்ளார் அறிவழகன்.
இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் அருண் விஜய்யுடன் ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார், ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் 2018ல் மிஸ் இண்டியா பட்டம் பெற்ற ஸ்டெபி படேல் தமிழுக்கு வருகிறார். முன்னதாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்த படமும் குற்றம் 23 போன்றே க்ரைம் த்ரில்லர் படம். அது மெடிக்கல் த்ரில்லர். இது எந்த மாதிரியான த்ரில்லர் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.