மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் | ஓய்வு பெற துடிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான் | என்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இப்போது என் படத்தை புரமோட் செய்கிறார்கள் ; கென் கருணாஸ் | மேடையில் நாற்காலி கவிழ்ந்து கீழே விழுந்த நாகசைதன்யா | ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் - த்ரிஷா, ரவி மோகன் - கெனிஷா | வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் |

ஈரம், வல்லினம் படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கிய குற்றம் 23 படம் அருண்விஜய்க்கு திருப்பம் தந்த படமாக அமைந்தது. இதை தொடர்ந்து அருண் விஜய்யின் 31வது படத்தை இயக்கி முடித்துள்ளார் அறிவழகன்.
இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனாலும் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதில் அருண் விஜய்யுடன் ரெஜினா கெசண்ட்ரா நடித்துள்ளார், ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் 2018ல் மிஸ் இண்டியா பட்டம் பெற்ற ஸ்டெபி படேல் தமிழுக்கு வருகிறார். முன்னதாக சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இந்த படமும் குற்றம் 23 போன்றே க்ரைம் த்ரில்லர் படம். அது மெடிக்கல் த்ரில்லர். இது எந்த மாதிரியான த்ரில்லர் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்புகள் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




