அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம் இவர்களுடன் அமிதாப்பச்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.
இப்படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்து நாட்டில் ஆரம்பமாகி நடைபெற்றது. கடந்த வருட ஜனவரி மாதம் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் நடத்தினார்கள். அதன்பின் ஹைதராபாத்தில் பிப்ரவரி மாதம் வரை நடத்தினார்கள்.
மார்ச் மாதம் கொரானோ தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெறாத படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யா ஆகியோருடன் ஹைதராபாத் வந்து தங்கியுள்ளாராம்.
தொடர்ந்து ஒரு மாத காலம் தங்கியிருந்து அவருடைய படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளாராம். இதன்பின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கும் எனத் தெரிகிறது.