Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் பற்றி சில தகவல்கள்!!

11 நவ, 2012 - 05:37 IST
எழுத்தின் அளவு:

கார்த்திக்கின் அடுத்த படம் அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை, சகுனியில் ஒர்க் அவுட் ஆன கார்த்தி-சந்தானம் ஜோடி இதிலும் உண்டு, கார்த்திக்கை கட்டிப்பிடித்து ஆடப்போகிறவர் அனுஷ்கா. படம் பற்றிய சில லேட்டஸ்ட் தகவல்கள் இவை....

*கார்த்திக் இதுவரை நடித்த படங்களில் அதிக பொருட் செலவில் தயாராகும் படம். அவரது உறவினர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்,

*கிராமத்திலிருந்து ஒரு வேலையாக சென்னை வரும் கார்த்திக் தனது தூரத்து உறவினரான சந்தானம் வீட்டில் தங்குகிறார். கார்த்திக்கை சுத்தமாக பிடிக்காத சந்தானம் அவரை வீட்டை விட்டு விரட்ட பல பிளான்களை போடுகிறார். அதில் மொக்கை வாங்குகிறார். இதுதான் காமெடி ஏரியா. வந்த இடத்தில் ஒரு நியாத்தை கேட்கப்போய் வம்பில் மாட்டிக் கொள்ளும் கார்த்தி அதிலிருந்து எப்படி மீண்டு தான் வந்த காரியத்தை முடிக்கிறார் என்பது ஆக்ஷன் பிளாக். இதற்கிடையில் அனுஷ்காவுடன் காதல் வெளிநாட்டு டூயட் எல்லாம் உண்டு.

*கார்த்திக் ஓடும் ரயிலின் கூறை மீது நின்று கொண்டு உயிரை பணயம் வைத்து சண்டை போட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 7 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ரயிலை வாங்கி அதனை மைசூர் டூ பெங்களூர் ரூட்டில் ஓடவிட்டு ஹெலிகாப்டரில் துரத்தி படம் எடுத்திருக்கிறார்கள்,

*அனுஷ்கா முதன் முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். எதிரிகளோடு பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுகிறார்.

*அனுஷ்கா கேரவன் வேண்டும் என்று கேட்காமல் செட்டிலேயே திரைகட்டி உடை மாற்றி நடித்தாராம்.

*மிலிந்த்சோமன், சுமன், மகாதேவன் ஆகியோர் வில்லன் கூடாரத்தை சேர்ந்தவர்கள்.

*சென்னை, பாண்டிச்சேரி, சாலக்குடி, ஐதராபாத், விசாகபட்டினம், மைசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

*ஒரு பாடலுக்காக 12 செட் போட்டிருக்கிறார் கலை இயக்குனர் பிரபாகர்.

* படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். வாலி, பா.விஜய், விவேகா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். 

*இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கிறார் அலெக்ஸ் பாண்டியன். பொங்கலுக்கு வருகிறார்.

ஒண்ணும் புதுசா இல்லியேஜி...!!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)