புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
முனி, சக்கரகட்டி உள்பட பல படங்களில் நடித்தவர் வேதிகா. ஆனால் அவரது பெயர் ரீச் ஆன அளவுக்கு அவரது நடிப்பு ரீச் ஆகவில்லை. இருப்பினும் இடைவிடாத முயற்சி காரணமாக தற்போது பாலாவின் பரதேசி படத்தில் நாயகியாக நடித்துள்ளார் வேதிகா. இந்த படத்துக்காக பல மாதங்கள் கடுமையாக உழைத்திருப்பதாக சொல்லும் வேதிகா, தேயிலை தோட்டம் மற்றும் காட்டுப்பகுதிகளில் கல்லிலும் முள்ளிலும் நடந்து கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். சில நாட்கள் மேக்கப் போட்டு ஸ்பாட்டில் காத்திருப்பேன். ஆனால் அன்று முழுக்க என்னை நடிக்க கூப்பிடவே மாட்டார் டைரக்டர். ஆனால் சில நாட்களில் காலையில் தொடங்கி இரவு 9 மணி வரைக்கும் விடவே மாட்டார். அவரது மூடைப்பொறுத்து படப்பிடிப்பு நடத்துவார். என்றாலும் டைரக்டரின் மனநிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டு பரதேசி படத்தில் நடித்துள்ளேன் என்கிறார் வேதிகா.
இப்படி பலவிதமான கஷ்டங்கள் ஒருபுறமிருக்க, ஒருநாள் காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, மரங்களில் இருந்து விழுந்த சில அட்டப்பூச்சிகள் வேதிகாவின் உடம்பில் விழுந்து கடித்து ரத்தம் குடித்து விட்டனவாம். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி விட்டாராம். அதோடு, இனி இந்த ஸ்பாட்டில் நான் ஒரு நிமிடம்கூட இருக்கவே மாட்டேன் என்று அங்கிருந்து விட்டால் போதுமென்று ஓட்டம்பிடித்து விட்டாராம் வேதிகா.