Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டைரக்டர் அமீரை சிக்க வைத்த கேள்வி?

30 அக், 2012 - 10:24 IST
எழுத்தின் அளவு:

மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களை இயக்கிய அமீர் தற்போது இயக்கியுள்ள படம் ஆதிபகவன். ஜெயம்ரவி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நீது சந்திரா நாயகியாக நடித்துள்ளார். இதுவரை யதார்த்தமான கதைகளையே படமாக்கி வந்த அமீர், முதன்முறையாக இப்படத்தின் மூலம் கமர்சியல் கதையை படமாக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் 40 கோடி செலவில் இப்படத்தை படமாக்கி திரும்பியிருக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது ஒரு நிருபர், யதார்த்தமான கதைகளை படமாக்கிய உங்களைப்போன்ற இயக்குனர்களால்தான் தமிழ் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தோம். ஆனால் நீங்களும் கமர்சியல் படத்துக்கு திரும்பி சராசரி இயக்குனராகி விட்டீர்களே என்று அமீரை நோக்கி ஒரு கேள்விக்கணையை வீசினார்.

இதனால் தர்மசங்கடத்துக்கு ஆளான அமீர், படைப்பாளி என்பவனை ஒரு வட்டத்துக்குள் அடக்கக்கூடாது. யதார்த்தம், கமர்சியல் இரண்டுவிதமான களங்களிலும் அவன் ஆடவேண்டும். உங்களைப்போன்றோர் இப்படி சொல்லும்போதுதான் ஒரு படைப்பாளி தோற்றுப்போகிறான் என்று சொன்னஅவர், இந்த படம் கமர்சியல்தான். ஆனால் எனது அடுத்த படமான கண்ணபிரான் யதார்த்தமான கதையில் உருவாகிறது என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)